அண்ணன் அவருகளுக்கு நன்றி .
Saturday, 5 March 2011
மதுராந்தகம் அல்லது செய்யூரில் போட்டியிட வன்னிஅரசு சார்பில் விருப்பமனு!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுராந்தகம் அல்லது செய்யூரில் போட்டியிட வன்னிஅரசு சார்பில் விருப்பமனு! பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் அளித்தார்! ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த 1ஆம் தேதி முதல் விருப்ப மனு அளித்து வருகின்றனர். கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, மதுராந்தகம் அல்லது செய்யூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் ன்று கோரி, அவரது சார்ல்கட்சியின் பொதுச் செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் இன்று (3-3-2011) விருப்பமனு தாக்கல் செய்தார். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விருப்பமனுவைப் பெற்றுக்கொண்டார்.தலைவரின் தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Thursday, 3 March 2011
கம்பளிமேடு சுப்பிரமணியன் படுகொலையையும் பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தையும் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
கம்பளிமேடு சுப்பிரமணியன் படுகொலையையும்
பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தையும் கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
தொல். திருமாவளவன் அறிவிப்பு
(தொல். திருமாவளவன்)
பரளிபுதூர் சாதி வெறியாட்டத்தையும் கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
தொல். திருமாவளவன் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் உள்ள பரளிபுதூரில் கடந்த 13ஆம் தேதியன்று சாதி வெறியர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் தலித்துகளின் வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் எரிக்கப்பட்டுள்ளன. பல இலட்சக் கணக்கான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் எரிந்து போயுள்ளன. மேலும் வீடுகளில் நகை, பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களையும், பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச மிதிவண்டிகளையும் எரித்து நாசமாக்கியுள்ளனர்.
ஒரு திருமண விழாவில் எமது கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைத்த ஒரே காரணத்திற்காக நத்தம் வட்டத்திலுள்ள பல ஊர்களைச் சேர்ந்த சாதிவெறியர்கள் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியுள்ள உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. நத்தம் வட்டத்தில் தேநீர்க் கடைகளில் இன்னமும் இரட்டைக் குவளை முறை நீடித்து வருகிறது. பரளிபுதூருக்கு வந்து செல்லும் பேருந்துகளில் தலித்துகள் சரிசமமாக உட்கார்ந்து செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை.
கலவரத்திற்குக் காரணமான உள்ளூரைச் சேர்ந்த சாதி வெறியர்கள் இன்னமும் சுதந்திரமாகவே நடமாடி வருகிறார்கள். வன்முறை வெறியாட்டத்தில் குடிநீர்த் தொட்டியை உடைத்தும், மின்மாற்றிக் கம்பங்களை தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளதால் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஆகவே, தமிழக அரசு நத்தம் பகுதியைத் தீண்டாமைப் பகுதியாக அறிவித்து பேருந்து மற்றும் தேநீர்க் கடைகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்த வேண்டும்.
பரளிபுதூர் சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்தும் கடலூர் மாவட்டம், கம்பளி மேடு சுப்பிரமணியன் படுகொலையைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 04.03.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவண்
ஒரு திருமண விழாவில் எமது கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைத்த ஒரே காரணத்திற்காக நத்தம் வட்டத்திலுள்ள பல ஊர்களைச் சேர்ந்த சாதிவெறியர்கள் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியுள்ள உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. நத்தம் வட்டத்தில் தேநீர்க் கடைகளில் இன்னமும் இரட்டைக் குவளை முறை நீடித்து வருகிறது. பரளிபுதூருக்கு வந்து செல்லும் பேருந்துகளில் தலித்துகள் சரிசமமாக உட்கார்ந்து செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை.
கலவரத்திற்குக் காரணமான உள்ளூரைச் சேர்ந்த சாதி வெறியர்கள் இன்னமும் சுதந்திரமாகவே நடமாடி வருகிறார்கள். வன்முறை வெறியாட்டத்தில் குடிநீர்த் தொட்டியை உடைத்தும், மின்மாற்றிக் கம்பங்களை தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளதால் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஆகவே, தமிழக அரசு நத்தம் பகுதியைத் தீண்டாமைப் பகுதியாக அறிவித்து பேருந்து மற்றும் தேநீர்க் கடைகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்த வேண்டும்.
பரளிபுதூர் சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்தும் கடலூர் மாவட்டம், கம்பளி மேடு சுப்பிரமணியன் படுகொலையைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 04.03.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவண்
(தொல். திருமாவளவன்)
தி.மு.க. கூட்டணி உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கொண்டுள்ளோம்! தொல். திருமாவளவன் அறிவிப்பு
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென 28.02.2011 அன்று கூட்டணியின் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க அளவிலான தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. குறைந்தது பதினைந்து தொகுதிகளிலாவது போட்டியிட்டால்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுமளவிலான இடங்களில் வெற்றி;பெற இயலும். ஆகவேதான், பதினைந்து தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கோரியது. இது எமது தகுதிக்கு மீறியதாகவோ, அடாவடித்தனமான கோரிக்கையாகவோ யாரும் கருதிவிட இயலாது. நாடுதழுவிய அளவில் 234 தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம் என்பதைக் கடந்த 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களில் உறுதிப்படுத்தியிருக்கிறோம். ‘வடமாவட்டங்களில் மட்டும்’ அல்லது ‘மேற்கு’ அல்லது ‘தெற்கு மாவட்டங்களில் மட்டும்’ என்று ஒரு ‘பகுதி சார்ந்த’ கட்சியாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கட்சியாகவோ இல்லாமல், தமிழகம் தழுவிய அளவிலும் அனைத்துத்தரப்பு மக்களும் அங்கம் வகிக்கும் அளவிலும் வளர்ச்சியடைந்துள்ள அரசியல் கட்சியாகும் விடுதலைச் சிறுத்தைகள்.
அண்மையில், நடந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் 45 இலட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். சுமார் இருபதாயிரத்துக்கும் (20,000)க்கும் மேலான கிளைகள் புதியதாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டமைப்புரீதியாக வலிமை பெற்றுள்ள, தீவிரமாக உழைக்கக்கூடிய களப்பணியாளர்களைக் கொண்டுள்ள கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், பத்து தொகுதிகளை மட்டுமே தி.மு.க கூட்டணியில் பெற முடிந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் ஒரு ஏமாற்றமாகக் கருதுவதில் தவறேதும் இருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நெருக்கடியான சூழல்களில் தி.மு.க-வுக்கு உற்றத்துணையாய் இருந்து, நம்பிக்கைக்குரிய தோழர்களாய் இருந்து வாதாடியவர்கள், போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இதனால், கடுமையான விமர்சனங்களுக்கும் பொல்லாத வீண்பழிகளுக்கும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்களின் ஆதாரமில்லாத அவதூறுகளுக்கும் ஆளானவர்கள.; இலாப-நட்டக் கணக்குப் பார்க்காமல், அரசியலில் நட்புக்கும் தோழமைக்கும் புதிய இலக்கணமாகச் செயலாற்றி வருபவர்கள்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க-விடம் தோழமையுடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் தவறென்ன இருக்கமுடியும்? எனினும், தற்போதுள்ள சூழலில் நடைமுறை சாத்தியக் கூறுகளைக்கணக்கில் கொண்டு, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப் பாங்கோடு, கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்கிற தோழமையுணர்வோடு, எமது எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். ‘நடுக்கண்டம் எனக்கு’ என்று அடம்பிடிக்கும் போக்கில்லாமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டுமென்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்! எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தி அணி மாறுவோமென திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுக்காமல் ‘அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளம் விடுதலைச் சிறுத்தைகள்’ என்று மீண்டும் நிலைநாட்டும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். இதில் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணுவது நமது ஆளுமையின்மீது நாமே கறைபூசுவதாக அமைந்துவிடும். அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும், அழுத்தமாகவும், ஆழமாகவும் வேர் விட்டு வலிமையோடு வளர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளின் தூய தொண்டுக்கும் நட்புறவில் காட்டும் நம்பகத்தன்மைக்கும் உரிய மதிப்பை, வெகுமதியை, பொதுமக்கள் வழங்குவார்கள். நாம் பெற்ற பத்து (10) தொகுதிகளையும் வெற்றிபெற வைப்பார்கள். அந்த நம்பிக்கையோடு களமிறங்குவோம். ‘நாம் இடம் பெற்றுள்ள தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது; தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. என்கிற வரலாற்றுப் பதிவை இந்தத் தேர்தலில் உருவாக்குவோம். கூட்டணியின் ஒத்துழைப்போடும், பொதுமக்களின் நல்லாதரவோடும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுப்போம். 2011-விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்பதை நிலைநாட்டுவோம். போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் 01.03.2011 முதல் 10.03.2011 வரை தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. தவறாமல் விடுதலைச் சிறுத்தைகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டுகிறோம்..
அண்மையில், நடந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் 45 இலட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். சுமார் இருபதாயிரத்துக்கும் (20,000)க்கும் மேலான கிளைகள் புதியதாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டமைப்புரீதியாக வலிமை பெற்றுள்ள, தீவிரமாக உழைக்கக்கூடிய களப்பணியாளர்களைக் கொண்டுள்ள கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், பத்து தொகுதிகளை மட்டுமே தி.மு.க கூட்டணியில் பெற முடிந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் ஒரு ஏமாற்றமாகக் கருதுவதில் தவறேதும் இருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நெருக்கடியான சூழல்களில் தி.மு.க-வுக்கு உற்றத்துணையாய் இருந்து, நம்பிக்கைக்குரிய தோழர்களாய் இருந்து வாதாடியவர்கள், போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இதனால், கடுமையான விமர்சனங்களுக்கும் பொல்லாத வீண்பழிகளுக்கும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்களின் ஆதாரமில்லாத அவதூறுகளுக்கும் ஆளானவர்கள.; இலாப-நட்டக் கணக்குப் பார்க்காமல், அரசியலில் நட்புக்கும் தோழமைக்கும் புதிய இலக்கணமாகச் செயலாற்றி வருபவர்கள்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க-விடம் தோழமையுடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் தவறென்ன இருக்கமுடியும்? எனினும், தற்போதுள்ள சூழலில் நடைமுறை சாத்தியக் கூறுகளைக்கணக்கில் கொண்டு, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப் பாங்கோடு, கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்கிற தோழமையுணர்வோடு, எமது எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். ‘நடுக்கண்டம் எனக்கு’ என்று அடம்பிடிக்கும் போக்கில்லாமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டுமென்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்! எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தி அணி மாறுவோமென திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுக்காமல் ‘அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளம் விடுதலைச் சிறுத்தைகள்’ என்று மீண்டும் நிலைநாட்டும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். இதில் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணுவது நமது ஆளுமையின்மீது நாமே கறைபூசுவதாக அமைந்துவிடும். அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும், அழுத்தமாகவும், ஆழமாகவும் வேர் விட்டு வலிமையோடு வளர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளின் தூய தொண்டுக்கும் நட்புறவில் காட்டும் நம்பகத்தன்மைக்கும் உரிய மதிப்பை, வெகுமதியை, பொதுமக்கள் வழங்குவார்கள். நாம் பெற்ற பத்து (10) தொகுதிகளையும் வெற்றிபெற வைப்பார்கள். அந்த நம்பிக்கையோடு களமிறங்குவோம். ‘நாம் இடம் பெற்றுள்ள தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது; தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. என்கிற வரலாற்றுப் பதிவை இந்தத் தேர்தலில் உருவாக்குவோம். கூட்டணியின் ஒத்துழைப்போடும், பொதுமக்களின் நல்லாதரவோடும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுப்போம். 2011-விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்பதை நிலைநாட்டுவோம். போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் 01.03.2011 முதல் 10.03.2011 வரை தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. தவறாமல் விடுதலைச் சிறுத்தைகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டுகிறோம்..
இவண்
தொல்.திருமாவளவன்
Subscribe to:
Posts (Atom)